கிருஷ்ணராயபுரம் அருகே பழையஜெயங்கொண்ட சோழபுரத்தில் பழைமை வாய்ந்த ஆரணவல்லி சமேத ஆளவந்தீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் லட்சார்ச்சனை விழாவையொட்டி சுவாமிக்கு பால், தயிர், பழம் உள்பட பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து கோவில் வளாகத்தில் சிவாச்சாரியார்கள் ஒரு லட்சம் மந்திரங்கள் பாராயணம் செய்து, குங்குமம் மற்றும் மலர்கள் மூலம் அபிஷேகம் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.