தமிழக செய்திகள்

போலி ஆவணம் தயாரித்து நில மோசடி; 3 பேர் கைது

பாளையங்கோட்டையில் போலி ஆவணம் தயாரித்து நில மோசடி செய்ததாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

தினத்தந்தி

பாளையங்கோட்டை திருமால்நகரை சேர்ந்தவர் முருகன் (வயது 52). இவருக்கு சொந்தமான 50 சென்ட் நிலம் பாளையங்கோட்டை குலவணிகர்புரம் பகுதியில் உள்ளது. இந்த நிலத்தை கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த ராஜவேல் என்பவர் சிலருடன் சேர்ந்து போலி ஆவணம் தயாரித்து விற்பனை செய்ததாக முருகன் நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்தார்.

இதையடுத்து நெல்லை மாநகர குற்றப்பிரிவு உதவி போலீஸ் கமிஷனர் ஆவுடையப்பன், இன்ஸ்பெக்டர் சண்முகவடிவு ஆகியோர் விசாரணை நடத்தி, போலி ஆவணம் தயாரித்து நில மோசடியில் ஈடுபட்டதாக ராஜவேல் (86), என்.ஜி.ஓ. காலனியை சேர்ந்த நம்பி (60), ரெட்டியார்பட்டியை சேர்ந்த பகவான் ரெட்டியார் (70) மற்றும் சார்பதிவாளர் உள்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று ராஜவேல், நம்பி, பகவான் ரெட்டியார் ஆகிய 3 பேரை கைது செய்தனர். மற்றவர்களை தேடி வருகிறார்கள்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து