தமிழக செய்திகள்

போலி ஆவணம் மூலம் ரூ.1.40 கோடி மதிப்புள்ள நிலம் மோசடி செய்தவர் கைது

போலி ஆவணம் மூலம் ரூ.1.40 கோடி மதிப்புள்ள நிலம் மோசடி செய்தவர் கைது செய்யப்பட்டார்.

தினத்தந்தி

சென்னை ஏழுகிணறு தியாகராயபிள்ளை தெருவை சேர்ந்தவர் நிர்மலா (வயது 41). இவருக்கு அப்பகுதியை சேர்ந்த திருப்பதிய்யா என்பவர் அறிமுகமாகி உள்ளார். அவரிடமிருந்து 2,400 சதுர அடி நிலம் கொண்ட 2 வீட்டு மனைகளை கடந்து 2003-ம் ஆண்டு நிர்மலா வாங்கி அதை செம்பியம் சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்து அனுபவித்து வந்துள்ளார். இதையடுத்து கடந்த 2018-ம் ஆண்டு நிர்மலா செம்பியம் சார்பதிவாளர் அலுவலகத்தில் சென்று நிலத்தின் ஆவணத்தை வாங்கி பார்த்துள்ளார். அப்போது மாங்காடு அடுத்த கோவூர், அம்பாள் நகர், சாய்பாபா அவென்யூவை சேர்ந்த ராஜசேகர் (42) என்பவர் ஆள்மாறாட்டம் செய்து போலியான ஆவணம் தயாரித்து நிலமோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதுகுறித்து நிர்மலா ஆவடி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவின் பேரில், சுமார் ரூ.1 கோடி 40 லட்சம் மதிப்புள்ள நிர்மலாவின் நிலத்தை மோசடி செய்த ராஜசேகரை கைது செய்தனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து