தமிழக செய்திகள்

கொல்லிமலை மாதிரி பள்ளியில்சமையலர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்31-ந் தேதி கடைசி நாள்

தினத்தந்தி

நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கொல்லிமலை தாலுகா செங்கரை, ஏகலைவா மாதிரி உண்டு உறைவிட மேல்நிலைப்பள்ளியில் உள்ள விடுதிக்கு சமையல் செய்ய பணியாளர்கள் தொகுப்பூதிய அடிப்படையில் தற்காலிகமாக நியமிக்கப்பட உள்ளனர். அதன்படி 2 சமையலர் பணியிடங்களுக்கு ஆண்களும், 3 உதவி சமையலர் பணியிடங்களுக்கு பெண்களும், ஒரு துப்புரவாளர் பணிக்கு இருபாலரும் என 6 பணியிடங்களுக்கு சமையல் கலை தெரிந்த பழங்குடியினரிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. வயது உச்ச வரம்பு 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் சமையலர் மற்றும் உதவி சமையலர்களுக்கு மாதம் ரூ.12 ஆயிரம் வீதமும், துப்புரவாளருக்கு ரூ.5,200-ம் தொகுப்பூதியமாக வழங்கப்படும்.

மேற்காணும் பணியிடங்களுக்கு விருப்பமுள்ள நபர்கள் தங்களது விண்ணப்பத்தை வருகிற 31-ந் தேதி மாலை 5 மணிக்குள் திட்ட அலுவலகம், பழங்குடியினர் நலம், கொல்லிமலை தாசில்தார் அலுவலகம் வளாகம் அல்லது தலைமை ஆசிரியர், ஏகலைவா மாதிரி உண்டு உறைவிட மேல்நிலைப்பள்ளி, செங்கரை, கொல்லிமலை தாலுகா என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து