சென்னை ,
சென்னை விமான நிலையத்தில் மத்திய மந்திரி எல்.முரு கன், செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது,
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு நிலை குறித்து பல இடங்களில் கவலை அளிக்கிறது. மதுரை, நாங்குநேரி, ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை உள் ளிட்ட பகுதிகளில் சமீபத்தில் நடந்த சம்பவங்கள் தொடர்பாக போலீசார் தீவிரமாக நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்களின் பாதுகாப்பு உறு திப்படுத்தப்பட வேண்டும்.
முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி தலைமையிலான ஆட்சிக்காலத் தில் போலீஸ் அதிகாரிகள் பல்வேறு பகுதிகளில் பணியமர்த்தப்பட வேண் டும் என்ற அரசாணை வெளியிடப்பட்டிருந்தது. அந்த உத்தரவுகள் நடைமு றைப்படுத்தப்பட வேண்டும். மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய போலீ சார் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை வலுப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.