தமிழக செய்திகள்

வக்கீல்கள் உண்ணாவிரதம்

திண்டுக்கல் வக்கீல்கள் நலச்சங்கம் சார்பில், திண்டுக்கல் ஒருங்கிணைந்த கோர்ட்டு முன்பு உண்ணாவிரத போராட்டம் நடந்தது.

தினத்தந்தி

திண்டுக்கல் வக்கீல்கள் நலச்சங்கம் சார்பில், திண்டுக்கல் ஒருங்கிணைந்த கோர்ட்டு முன்பு உண்ணாவிரத போராட்டம் நடந்தது.திண்டுக்கல் வக்கீல்கள் நலச்சங்கம் சார்பில், திண்டுக்கல் ஒருங்கிணைந்த கோர்ட்டு முன்பு உண்ணாவிரத போராட்டம் நடந்தது. இதற்கு சங்க தலைவர் ரமேஷ் தலைமை தாங்கினார். செயலாளர் தனசேகர், துணைத்தலைவர் விவேக், துணை செயலாளர் தர்மர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்திய தண்டனை சட்டம், இந்திய சாட்சிய சட்டம், குற்றவியல் நடைமுறை சட்டம் ஆகியவற்றின் பெயர்களை இந்தி மற்றும் சமஸ்கிருத மொழிகளில் மாற்றம் செய்வதை கண்டித்து இந்த போராட்டம் நடந்தது. உண்ணாவிரதத்தில் சங்க செயற்குழு உறுப்பினர்கள் மலைராஜன், ஜெய்சங்கர், புவனேஸ்வரி மற்றும் வக்கீல்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு கோரிக்கையை வலியுறுத்தி பேசினர்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்