தமிழக செய்திகள்

3 குற்றவியல் சட்டங்களை மாற்றுவதற்கு எதிர்ப்பு:வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்

3 குற்றவியல் சட்டங்களை மாற்றுவதற்கு எதிர்ப்பு தொவித்து வக்கீல்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா.

தினத்தந்தி

இந்திய தண்டனை சட்டம், குற்றவியல் நடைமுறை சட்டம், இந்திய ஆதார சட்டம் ஆகிய 3 சட்டங்களை இந்தியில் மாற்றுவதற்கான மசோதாவை மத்திய அரசு அறிமுகம் செய்து அதனை மக்களவையில் தாக்கல் செய்தன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விழுப்புரம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் பணியாற்றி வரும் வக்கீல்கள் நேற்று நீதிமன்ற வளாகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கிரிமினல் கோர்ட்டு பார் அசோசியேசன் தலைவர் காளிதாஸ் தலைமை தாங்கினார். இதில் வக்கீல்கள் சண்முகம், ராஜாராம், தன்ராஜ், பொன்சிவா, பிரின்ஸ்சோமு, ராம்பிரசாத், பாலகிருஷ்ணன், கந்தன், முத்துலிங்கம், அலாவுதீன், பாலாஜி, அகத்தியன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை