தமிழக செய்திகள்

நாமக்கல், ராசிபுரத்தில்வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்

தினத்தந்தி

இ-பைலிங் முறையை கண்டித்தும், அதை ரத்து செய்ய வலியுறுத்தியும் நாமக்கல் வக்கீல்கள் சங்கம் சார்பில் ஒருங்கிணைந்த கேர்ட்டு வளாகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. சங்க செயலாளர் ராஜவேல் தலைமை தாங்கினார். இதில் சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

இந்திய தண்டனை சட்டம், குற்றவியல் விசாரணை முறை சட்டம், இந்திய சாட்சிய சட்டம் ஆகியவற்றை மத்திய அரசு இந்தி மற்றும் சமஸ்கிருத மொழியில் பெயர் மாற்றம் செய்து மசோதா தாக்கல் செய்துள்ளதை கண்டித்தும், அதனை திரும்ப பெறவும், இ-பைலிங் முறையை கட்டாயப்படுத்த கூடாது உள்ளிட்டவற்றை வலியுறுத்தி ராசிபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன்பு வக்கீல்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்கம், ராசிபுரம் வழக்கறிஞர்கள் சங்கம், ராசிபுரம் சிவில் வழக்கறிஞர்கள் சங்க வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கோரிக்கைளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை