தமிழக செய்திகள்

சட்ட விழிப்புணர்வு முகாம்

விழுப்புரம் மின்வாரிய அலுவலகத்தில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது.

தினத்தந்தி

விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் சார்பில் விழுப்புரம் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தில் நேற்று மாலை சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி பூர்ணிமா தலைமை தாங்கி, பணி செய்யும் இடத்தில் பெண்களுக்கான பாலியல் தொந்தரவுகள் பற்றியும், அதனை தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்தும் பல்வேறு கருத்துக்களை எடுத்துக்கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். அதோடு அதுபோன்ற குற்றங்களில் இருந்து நம்மை எவ்வாறு பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்றும் அறிவுரை வழங்கினார். மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் மதனகோபால், அனைவரையும் வரவேற்றார். தலைமை பொறியாளர் வசுநாயர் பிரேம்குமார் வாழ்த்துரை வழங்கினார். சட்ட கருத்துரையாக மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் வக்கீல் திலகவதியும், மாவட்ட சிறப்பு நீதிபதி பாக்யஜோதியும் கருத்துரை வழங்கினர். அப்போது விசாகா வழக்கின் சாராம்சம் மற்றும் பெண்கள் எவ்வாறு இருக்க வேண்டும் என்று விளக்கி கூறினர்.

இம்முகாமில் மின்சார வாரிய பணியாளர்கள்150-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். முடிவில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளர் பஷீர் நன்றி கூறினார்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு