தமிழக செய்திகள்

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் ரூ.252.34 கோடிக்கு மது விற்பனை...!

மதுக்கடைகளுக்கு இன்று விடுமுறை என்பதால் நேற்று அதிகளவில் மது விற்பனையாகியுள்ளது.

சென்னை,

உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு இன்று அனைத்து மாவட்டங்களிலும் மதுக்கடைகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் நாளை( அதாவது இன்று) விடுமுறை என்பதால் நேற்று மதுக்கடைகளில் மதுப்பிரியர்கள் அதிக அளவில் வந்தனர்.

மதுபான கடைகளில் இருந்து மதுப்பிரியர்கள் பெட்டி, பெட்டியாக மதுபாட்டில்களை வாங்கிச் சென்றனர். சிலர் தாங்கள் எடுத்து வந்த பைகளில் மதுபாட்டில்களை வாங்கி சென்றனர். நேரம் செல்ல செல்ல மதுக்கடைகளில் கூட்டம் அதிகரிக்க தொடங்கியது. கார் மற்றும் இரு சக்கர வாகனங்களில் வந்த மது பிரியர்கள் அதிக அளவில் மது பாட்டில்களை வாங்கி பைகளில் எடுத்துச் சென்றனர்.

இந்த நிலையில், மதுக்கடைகளுக்கு இன்று விடுமுறை என்பதால் நேற்று அதிகளவில் மது விற்பனையாகியுள்ளது. அதன்படி, தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் ரூ.252.34 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக மதுரை மண்டலத்தில் ரூ.54.89 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது. அடுத்தபடியாக சென்னை மண்டலத்தில் ரூ. 52.28 கோடிக்கும் மது விற்பனையாகியுள்ளது.

திருச்சி மண்டலத்தில் ரூ.49.78 கோடிக்கும், சேலம் மண்டலத்தில் 48.67 கோடிக்கும், கோவை மண்டலத்தில் ரூ.46.72 கோடிக்கும் மது விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி