கோப்புப்படம்  
தமிழக செய்திகள்

தீபாவளியையொட்டி கடந்த இரண்டு நாட்களில் தமிழகத்தில் ரூ.467 கோடிக்கு மது விற்பனை

தீபாவளி பண்டிகையையொட்டி டாஸ்மாக் கடைகளில் கடந்த இரண்டு நாட்களில் ரூ.467.63 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது.

தினத்தந்தி

சென்னை,

தீபாவளி பண்டிகையையொட்டி டாஸ்மாக் கடைகளில் கடந்த இரண்டு நாட்களில் ரூ.467.63 கோடிக்கு மதுவிற்பனை நடந்துள்ளது. நவம்பர் 11-ந்தேதி ரூ.221 கோடிக்கும் தீபாவளி தினமான நேற்று ரூ.246 கோடிக்கும் மது விற்பனை நடைபெற்றுள்ளது.

தீபாவளிக்கு முந்தைய நாளில் மதுரை மண்டலத்திலும், தீபாவளியன்று திருச்சி மண்டலத்திலும் அதிக அளவில் மதுவிற்பனை நடைபெற்றுள்ளது. நவம்பர் 11-ல் மண்டல வாரியாக நடைபெற்ற மது விற்பனை விவரம்:-

மதுரை - ரூ.52.73 கோடி,

சென்னை - ரூ.48.12 கோடி

கோவை - ரூ.40.20 கோடி

திருச்சி - ரூ.40.02 கோடி-

சேலம் - ரூ.39.78 கோடி

நவம்பர் 12-ல் மண்டல வாரியாக நடைபெற்ற மது விற்பனை விவரம்:-

திருச்சி - ரூ.55.60

சென்னை - ரூ.52.98

மதுரை - ரூ.51.97 கோடி

சேலம் - ரூ.46.62 கோடி

கோவை - ரூ.39.61 கோடி

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்