தமிழக செய்திகள்

மது விற்றவர் கைது

திசையன்விளையில் மது விற்றவர் கைது செய்யப்பட்டார்.

திசையன்விளை:

திசையன்விளை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரியராஜ்குமார் மற்றும் போலீசார் நேற்று திசையன்விளை பஸ் நிலைய பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது பஸ் நிலையத்தில் உள்ள பெட்டிக்கடையில் அரசு மதுபான கடையில் மதுபாட்டில்களை வாங்கி வந்து அதை கடையில் வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்த திசையன்விளை தெற்கு தெருவைச் சேர்ந்த கருணாகரன் (வயது 33) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து மதுபாட்டில்கள், ரூ.200 பறிமுதல் செய்யப்பட்டது.

SCROLL FOR NEXT