தமிழக செய்திகள்

உள்ளாட்சி 2-ஆம் கட்ட தேர்தல்: 78.47 சதவீத வாக்குப்பதிவு

உள்ளாட்சி 2 ஆம் கட்ட தேர்தலில் 78.47 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தினத்தந்தி

சென்னை,

தமிழகத்தில் செங்கல்பட்டு, காஞ்சீபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. முதல்கட்ட தேர்தல் 6-ந் தேதி நடந்து முடிந்தது. இந்த நிலையில், 2-ஆம் கட்ட தேர்தல் நேற்று நடைபெற்றது.

காலை 7 மணிக்கு துவங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் 12 ஆம் தேதி எண்ணப்பட உள்ளது. நடந்து முடிந்த 2 ஆம் கட்ட தேர்தலில் 78.47-சதவீத வாக்குகள் பதிவானதாக தமிழக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து