கன்னியாகுமரி,
கேரள மறுமலர்ச்சியின் தந்தையாக போற்றப்படும் ஸ்ரீநாராயண குருவை பின்பற்றுவோர்கள் கன்னியாகுமரியில் பெருமளவில் வாழ்ந்து வருகின்றனர். எனவே அவரது பிறந்த நாளை விடுமுறை நாளாகக் குறிப்பிட வேண்டும் என சமூக மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்த நிலையில், ஸ்ரீநாராயணகுரு பிறந்ததினத்தை முன்னிட்டு, கன்னியாகுமரி மாவட்டத்துக்கு வருகிற 28-ந்தேதி உள்ளூர் விடுமுறை வழங்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இந்த விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக, செப்டம்பர் 12-ந்தேதி வேலை நாளாக செயல்படும் என்றும் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.