தமிழக செய்திகள்

திருச்சி மாவட்டத்திற்கு ஏப்ரல் 29ஆம் தேதி உள்ளூர் விடுமுறை..!

திருச்சி மாவட்டத்திற்கு ஏப்ரல் 29ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி

சென்னை,

பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படுவதும், 108 வைனவ திருத்தலங்களில் முதன்மையானதுமாக விளங்கும் திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் திருக்கோவிலில் ஆண்டுதோரும் சித்திரைத்திருவிழா 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம்.

அதன்படி, இந்த ஆண்டு சித்திரைத்திருவிழா இன்று அதிகாலை 5 மணியளவில் கொடியேற்றத்துடன் விமரிசையாக தொடங்கியது. இன்றிலிருந்து 10 நாட்களுக்கு காலை மற்றும் மாலை வேளைகளில் நம்பெருமாள் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.

சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சித்திரை தேரோட்டமானது வருகிற 29 ஆம் தேதி நடைபெற உள்ளது.

இந்த நிலையில், ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சாமி கோவில் சித்திரைத்தேர் திருவிழாவை முன்னிட்டு திருச்சி மாவட்டத்திற்கு ஏப்ரல் 29ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் சிவராசு அறிவித்துள்ளார். விடுமுறையை ஈடுசெய்ய மே 7ஆம் தேதி பணிநாளாக செயல்படும் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து