தமிழக செய்திகள்

திருவள்ளூர் மாவட்ட கோர்ட்டுகளில் 'லோக் அதாலத்'

திருவள்ளூர் மாவட்ட கோர்ட்டுகளில் ‘லோக் அதாலத்’ வருகின்ற 9-ந் தேதி நடக்கிறது.

தினத்தந்தி

திருவள்ளூர் மாவட்ட முதன்மை நீதிபதி செல்வசுந்தரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது:-

திருவள்ளூரில் உள்ள ஒருங்கிணைந்த மாவட்ட கோர்ட்டு மற்றும் அம்பத்தூர், பூந்தமல்லி, திருவொற்றியூர், பொன்னேரி, திருத்தணி, பள்ளிப்பட்டு, ஊத்துக்கோட்டை, கும்மிடிப்பூண்டி மற்றும் மாதவரம் ஆகிய தாலுகா கோர்ட்டுகளிலும் 9-ந் தேதி லோக் அதாலத் நடைபெறுகிறது.

லோக் அதாலத் மூலம் முடித்துவைக்கப்படும் வழக்குகளுக்கு மேல்முறையீடு கிடையாது. குற்றவியல், காசோலை, வங்கி கடன், கல்விக்கடன், வாகன விபத்து, விவாகரத்து, தொழிலாளர் நலன், உரிமையியல், சொத்து பிரச்சினை உள்ளிட்ட வழக்குகளுக்கு மக்கள் நீதிமன்றத்தில் பேச்சுவர்த்தைகள் மூலம் சமரச முறையில் தீர்வு காணப்படும். இதன் மூலம் பொதுமக்கள் தங்களது வழக்குகளுக்கு விரைவாகவும், சமரச முறையிலும் தீர்வு காணலாம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து