தமிழக செய்திகள்

மொபட் மீது லாரி மோதி விவசாயி சாவு

சேந்தமங்கலம்:

கொல்லிமலை அரியூர் நாடு ஊராட்சி கஸ்பா குழிவளவு பகுதியை சேர்ந்தவர் பங்காரு (வயது 77). விவசாயி. இவர் நேற்று முன்தினம் மொபட்டில் காளப்பநாயக்கன்பட்டியில் இருந்து நாமக்கல் சென்று கொண்டிருந்தார். அப்போது சேந்தமங்கலம் அருகே அக்கியம்பட்டி பகுதியில் சென்றபோது எதிரே மக்காச்சோளம் ஏற்றி வந்த லாரி எதிர்பாராதவிதமாக மொபட் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட பங்காரு பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து சேந்தமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...