தமிழக செய்திகள்

சிறுமியை கடத்திய லாரி டிரைவர் போக்சோவில் கைது

திருமணம் செய்வதற்காக சிறுமியை கடத்திய லாரி டிரைவர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

தினத்தந்தி

பெரம்பலூர் மாவட்டம் பீல்வாடி காலனி தெருவை சேர்ந்தவர் ஆனந்தராஜ் (வயது 27), லாரி டிரைவர். இவர் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த 17 வயது சிறுமியை கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் அந்த சிறுமி திடீரென மாயமானார். இதுகுறித்து அவரது பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் ஜெயங்கொண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதில் சிறுமியை திருமணம் செய்வதற்காக ஆனந்தராஜ் கடத்தி சென்றது தெரியவந்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் ஜெகநாத் தலைமையிலான போலீசார் ஆனந்தராஜை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். மேலும் அந்த சிறுமியை மீட்டு அவருடைய பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்