தமிழக செய்திகள்

திண்டுக்கல் அருகே நான்கு வழிச்சாலையில் கவிழ்ந்த லாரி

திண்டுக்கல் அருகே நான்கு வழிச்சாலையில் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

தினத்தந்தி

தூத்துக்குடியில் இருந்து திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளத்துக்கு காகித பண்டல்களை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த லாரியை தூத்துக்குடியை சேர்ந்த செல்வம் ஓட்டினார்.

திண்டுக்கல்-மதுரை நான்கு வழிச்சாலையில், தோமையார்புரம் பகுதியில் நேற்று காலை லாரி வந்தது. அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, தாறுமாறாக ஓடி சாலையோரத்தில் கவிழ்ந்தது. இதில், லாரியில் கொண்டுவரப்பட்ட காகிதங்கள் சாலையோர பள்ளத்தில் விழுந்தன.

இந்த விபத்தில் டிரைவர் செல்வம் லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்