தமிழக செய்திகள்

லாட்டரி சீட்டு விற்றவர் கைது

பாவூர்சத்திரம் அருகே லாட்டரி சீட்டு விற்றவரை போலீசார் கைது செய்தனர்.

தினத்தந்தி

பாவூர்சத்திரம்:

பாவூர்சத்திரம் பகுதியில் லாட்டரி சீட்டு விற்பனை நடப்பதாக கிடைத்த தகவலை தொடர்ந்து போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கே.டி.சி.நகர் அருகே மூன்று சக்கர வாகனத்தில் வந்த மாற்றுத்திறனாளியை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் கீழப்பாவூர் எஸ்.கே.தெருவை சேர்ந்த மாரிப்பாண்டி (வயது 40) என்பதும், இவர் விற்பனைக்காக தென்காசியில் இருந்து கேரள மாநில லாட்டரி சீட்டுகளை வாங்கி வைத்திருந்தததும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு