தமிழக செய்திகள்

லாட்டரி சீட்டு விற்றவர் கைது

லாட்டரி சீட்டு விற்றவர் கைது

தினத்தந்தி

நாகர்கோவில், 

நாகர்கோவில் அப்டா மார்க்கெட் பகுதியில் லாட்டரி சீட்டு விற்பதாக கோட்டார் போலீசாருக்கு தகவல் வந்தது. உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஆய்வு செய்தனர். அப்போது அங்குள்ள ஒரு வாழைப்பழம் விற்பனை செய்யும் கடையில் லாட்டரி சீட்டை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. உடனே லாட்டரி சீட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இதுதொடர்பாக கடை உரிமையாளர் கிருஷ்ணன்கோவிலை சேர்ந்த மணிகண்டன் (வயது 35) என்பவரை கைது செய்தனர்.

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு