தமிழக செய்திகள்

லாட்டரி சீட்டு விற்றவர் கைது

லாட்டரி சீட்டு விற்றவர் கைது செய்யப்பட்டார்.

தினத்தந்தி

திட்டச்சேரி:-

மயிலாடுதுறை ரெயிலடி தட்டாரத்தெருவை சேர்ந்தவர் மூர்த்தி (வயது 38). இவர் திட்டச்சேரி பஸ் நிலையத்தில் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்வதாக திட்டச்சேரி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி போலீசார் அங்கு சென்று மூர்த்தியை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர் வெளிமாநில லாட்டரி சீட்டுகளை விற்றது தெரியவந்தது. அவரிடம் இருந்த லாட்டரி சீட்டுகள் மற்றும் ரூ.250-ஐ போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மூர்த்தியை கைது செய்தனர். 

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு