தமிழக செய்திகள்

நாமக்கல்லில் வானில் ஏற்பட்ட பயங்கர சத்தம்..! காரணம் குறித்து கலெக்டர் விளக்கம்

நாமக்கல் மாவட்டத்தில் வானில் திடீரென பயங்கர சத்தமும் அதனை தொடர்ந்து லேசான நில அதிர்வும் ஏற்பட்டுள்ளது.

தினத்தந்தி

நாமக்கல்,

நாமக்கல் மாவட்டத்தில் நேற்று நண்பகல் 12 மணியளவில் வானில் பயங்கர சத்தம் எழுந்துள்ளது. இதைத் தொடர்ந்து லேசான நில அதிர்வும் ஏற்பட, பொதுமக்கள் பலர் தங்கள் வீடுகளில் இருந்து பதறியடித்தபடி வெளியே ஓடி வந்துள்ளனர். இந்த பயங்கர சத்தம் நாமக்கல் மற்றும் அதன் அண்டை மாவட்டங்களிலும் உணரப்பட்டுள்ளது.

கடந்த 2 வருடங்களில் மட்டும் நாமக்கல் மாவட்டத்தில் இது போல் 15-க்கும் மேற்பட்ட முறை பயங்கர சத்தத்துடன் கூடிய நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் வீடுகளில் இருந்த பொருட்களும் சேதமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் வானில் ஏற்பட்ட பயங்கர சத்தத்திற்கு சூப்பர் சோனிக் எனப்படும் போர் விமானம் சென்றதே காரணம் என நாமக்கல் கலெக்டர் ஸ்ரேயா பி இங் விளக்கமளித்துள்ளார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து