தமிழக செய்திகள்

லுப்தான்சா ஊழியர்கள் 2-வது முறையாக ஸ்டிரைக் - விமான சேவை பாதிப்பு

சென்னையில் இருந்து ஜெர்மனியின் பிராங்க் பர்ட் செல்லும் விமானமும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

தினத்தந்தி

சென்னை,

லுப்தான்சா ஏர்லைன்ஸ் விமான நிறுவன ஊழியர்கள் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 2வது முறையாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஜெர்மனியின் பிராங்க் பர்ட் நகரில் இருந்து, சென்னை வரும் விமானமும், சென்னையில் இருந்து பிராங்க் பர்ட் செல்லும் விமானமும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

போராட்டத்தால் இன்று விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், சென்னையில் இருந்து அமெரிக்கா, ஜெர்மன், கனடா, நெதர்லாந்து, ஜப்பான், கொரியா உள்ளிட்ட நாடுகளுக்கு செல்லும் பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் இருந்து பிராங்க் பர்ட் நகருக்கு, லுப்தான்சா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் தினமும் இயக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து