தமிழக செய்திகள்

மதுராந்தகம் முருகன் கோவில் குளத்தில் துர்நாற்றம் வீசுவதால் பக்தர்கள் அவதி

கோவில் குளத்தில் துர்நாற்றம் வீசுவதால் பக்தர்கள் அவதிப்படுகின்றனர்.

தினத்தந்தி

மதுராந்தகம்,

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் முருகன் கோவில் உள்ளது இங்கு கோவிலின் பின்பகுதி பெரிய குளம் உள்ளது. இந்த குளம் பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் பாசி படிந்து மரங்களும் முட்புதர்களும் சூழ்ந்த நிலையில் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் நகராட்சி குப்பைகள் அருகிலேயே கொட்டி விடுவதாலும் துர்நாற்றம் ஏற்பட்டு தொற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது. அருகில் நூலகம், கோவில் மற்றும் பள்ளி, குடியிருப்பு பகுதிகள் அங்கு உள்ளதால் பொதுமக்கள் மிகுந்த வேதனைக்கு உள்ளாகி உள்ளனர் இதனை தூர்வாரி சரி செய்யப்பட வேண்டும் என பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து