தமிழக செய்திகள்

மதுரை: அரசு மருத்துவ கல்லூரி மாணவர் தற்கொலை

பவன்குமார் சில தினங்களுக்கு முன்பு வீட்டில் திடீரென தூக்கு போட்டு தற்கொலைக்கு முயன்றார்.

தினத்தந்தி

மதுரை,

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி, பொதுட்டூர்பேட்டை பகுதியை சேர்ந்தவர் குருமோகன். இவருடைய மகன் பவன்குமார் (வயது 22). இவர் மதுரை அரசு மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ். 4-ம் ஆண்டு படித்து வந்தார்.

இவர், மதுரை தல்லாகுளம் பகுதியில் தனியாக வீடு எடுத்து வசித்து வந்தார்.  இந்தநிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டில் இருந்த பவன்குமார் திடீரென தூக்கு போட்டு தற்கொலைக்கு முயன்றார்.

இதுபற்றி தகவல் அறிந்து மீட்கப்பட்ட அவர் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். 

எனினும், சிகிச்சையில் இருந்த பவன்குமார் நேற்று மாலை உயிரிழந்தார். மாணவரின் தற்கொலைக்கான காரணம் குறித்து தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். பவன்குமாரின் கண்கள் அவர் பயின்ற மருத்துவ கல்லூரிக்கு தானமாக வழங்கப்பட்டது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்