தமிழக செய்திகள்

தொடர் பனிப்பொழிவால் மதுரை மல்லிகைப்பூ வரத்து குறைவு; கிலோ ரூ.2,000-க்கு விற்பனை

விளைச்சலுக்கான சீசன் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் பூக்களின் வரத்து குறைந்துள்ளது.

தினத்தந்தி

மதுரை,

தொடர் பனிப்பொழிவு காரணமாக மதுரை மல்லிகைப்பூ விளைச்சலுக்கான சீசன் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் பூக்களின் வரத்து குறைந்துள்ளது. இந்நிலையில், மல்லிகைப்பூ கிலோ 2,000 ரூபாய்க்கும், பிச்சிப்பூ மற்றும் முல்லைப்பூ 1,200 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

கனகாம்பரம் கிலோ 1,000 ரூபாய்க்கும், அரளிப்பூ 200 ரூபாய்க்கும், பட்டன்ரோஸ் 120 ரூபாய்க்கும், செவ்வந்தி 120 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அடுத்த சில வாரங்களுக்கு பூக்களின் விலை அதிகரிக்கும் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்