தமிழக செய்திகள்

மதுரை: விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல்

மதுரை சிம்மக்கல் பகுதியில் உள்ள அம்பேத்கரின் மார்பளவு சிலை பெயர்ந்து கிடந்ததை கண்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மதுரை,

மதுரை சிம்மக்கல் பகுதியில் உள்ள அம்பேத்கரின் மார்பளவு சிலை நேற்று முன்தினம் இரவு பெயர்ந்து கிடந்தது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பின் மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், "சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில் விசாரணை நடக்கிறது. கேரள லாரி ஒன்று பின்னோக்கி வந்தபோது எதிர்பாராதவிதமாக மோதியதில் சிலை உடைந்திருக்கலாம் என தெரிகிறது. இருப்பினும் தீவிர விசாரணை நடத்தி வருகிறோம்" என தெரிவித்தனர்.