தமிழக செய்திகள்

மதுரை திருப்பரங்குன்றம் சுப்ரமணியசுவாமி கோவில் தேரோட்டம் - போக்குவரத்து மாற்றம்

கோவில் விழாவை முன்னிட்டு மதுரையில் இன்றும், நாளையும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

மதுரை,

மதுரை மாநகர காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது;-

மதுரை மாநகர் திருப்பரங்குன்றம் சுப்ரமணியசுவாமி திருக்கோவிலில் திருக்கல்யாணம் மற்றும் தேரோட்டம் நிகழ்ச்சியை முன்னிட்டு, 04.04.2026 மற்றும் 05.04.2026 ஆகிய இரண்டு நாட்களுக்கு மாநகரில் தற்காலிக போக்குவரத்து மாற்றம்

  • திருநகரிலிருந்து மதுரை நகருக்குள் வரும் வாகனங்கள் கிரிவல பாதை மற்றும் திருப்பரங்குன்றம் மேம்பாலத்தில் செல்வதற்கு அனுமதி இல்லை. இவ்வாகனங்கள் அனைத்தும் GST Bypass Road சாலை வழியாக மூட்டா தோட்டம் சென்று நகருக்குள் செல்ல வேண்டும்

  • மதுரை நகரிலிருந்து திருப்பரங்குன்றம் மேம்பாலம் வழியாக திருநகர் செல்வதற்கு எந்த வாகனத்திற்கும் அனுமதி இல்லை. இவ்வாகனங்கள் அனைத்தும் மூட்டா தோட்டத்திலிருந்து GST Bypass Road சாலை வழியாக திருநகர் செல்ல வேண்டும்.

  • திருநகரிலிருந்து திருக்கோவிலுக்கு வரும் பக்தர்களின் வாகனங்கள் அனைத்தும் பூங்கா பேருந்து நிறுத்தம் அருகிலுள்ள காலி இடத்திலும் திருப்பரங்குன்றம் தெப்பக்குளத்திலுள்ள கட்டண வாகன நிறுத்தத்திலும் .அவர்களது வாகனங்களை நிறுத்த வேண்டும்.

  • மதுரை நகரிலிருந்து திருக்கோவிலுக்கு வரும் பக்தர்களின் நான்கு சக்கர வாகனங்கள் அனைத்தும் ஒக்கலிக்கர் மண்டபம் அருகிலுள்ள தெப்பக்குளம் கட்டண வாகன நிறுத்தத்திலும் இருசக்கர வாகனங்கள் திருப்பரங்குன்றம் ஆர்ச்சிலிருந்து மயில் மண்டபம் வரை சாலையின் இருபுறங்களிலும் Single Parking -ஆக நிறுத்த வேண்டும்.

  • திருப்பரங்குன்றம் மயில் மண்டபத்திலிருந்து திருப்பரங்குன்றம் சன்னதி தெரு வரை, DC அலுவலகத்திலிருந்து லாலா கடை வரை மற்றும் நான்கு ரத வீதிகளிலும் எந்த ஒரு வாகனங்களும் நிறுத்துவதற்கு அனுமதி கிடையாது.

  • அவனியாபுரத்திலிருந்து திருக்கோவிலிற்கு வரும் பக்தர்களின் வாகனங்கள் அனைத்தும் சரவண பொய்கை வாகன நிறுத்தத்திலும் அதற்கு அருகில் உள்ள கட்டண வாகன நிறுத்தத்திலும் நிறுத்த வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.