தமிழக செய்திகள்

மகா சூலினி மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா

மகா சூலினி மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா நடந்தது.

தினத்தந்தி

சமயபுரம்:

மண்ணச்சநல்லூர் அருகே கவுண்டம்பட்டி மேலூரில் மகா சூலினி மாரியம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் தேர்த்திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டு கடந்த 26-ந்தேதி கரகம் பாலித்தல் நிகழ்ச்சியுடன் விழா தொடங்கியது. 28-ந்தேதி இரவு மாவிளக்கு பூஜை நடைபெற்றது. 29-ந்தேதி காலை ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்து கோவிலுக்கு வந்தனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர்த்திருவிழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி, அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் அபிஷேகம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து அம்மன் தேரில் எழுந்தருளினார். பின்னர் மேளதாளங்கள் முழங்க, அதிர்வேட்டுகள் ஒலிக்க பக்தர்கள் தேரை இழுத்தனர். பக்தர்கள் தங்கள் வீடுகளுக்கு முன்பு ஆடுகள் வெட்டியும், தேங்காய் உடைத்தும் பயபக்தியுடன் அம்மனை வழிபட்டனர். விழாவில் மயில் பர்னிச்சர் உரிமையாளர் செந்தில்குமார் உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து மஞ்சள் நீராட்டுடன் அம்மன் குடிவிடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை கிராம மக்கள் மற்றும் பட்டயதாரர்கள் செய்திருந்தனர்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்