தமிழக செய்திகள்

மகாவீரர் ஜெயந்தி-வானதி சீனிவாசன் வாழ்த்து

சைத்ர மாதத்தின் 13-வது நாளில் மகாவீரர் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது.

சென்னை,

பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-

மகாவீரர் ஜெயந்தி என்பது சமண சமயத்தின் 24-வது மற்றும் கடைசி தீர்த்தங்கரரான வர்த்தமான மகாவீரரின் பிறந்தநாளைக் கொண்டாடும் முக்கிய பண்டிகையாகும். இது சைத்ர மாதத்தின் 13-வது நாளில் (மார்ச்-ஏப்ரல்) கொண்டாடப்படுகிறது. அகிம்சை, உண்மை மற்றும் சகோதரத்துவத்தை வலியுறுத்தும் இப்பண்டிகை, சிறப்பாக இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.

மகாவீரரின் போதனைகளான வன்முறை தவிர்த்தல் (அகிம்சை), வாய்மை (சத்தியம்) திருடாமை, இன்பம் துய்க்காதிருத்தல், பொருளியலில் பற்று அற்று இருத்தல் ஆகியவற்றை நினைவில் கொள்வோம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.