தமிழக செய்திகள்

பராமரிப்பு பணி: ஆவடி - பட்டாபிராம் இடையே மின்சார ரெயில் ரத்து

ஆவடி - பட்டாபிராம் இடையே மின்சார ரெயில் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

தினத்தந்தி

சென்னை,

சென்னை சென்ட்ரல் - அரக்கோணம் வழித்தடத்தில் உள்ள பட்டாபிராம் பணிமனையில் இன்று மற்றும் நாளை பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால் மின்சார ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டிருப்பதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ஆவடியிலிருந்து 10, 11 ஆகிய தேதிகளில் காலை 3 மணிக்கு புறப்பட்டு பட்டாபிராம் செல்லும் மின்சார ரெயிலும், பட்டாபிராமில் இருந்து 9, 10 ஆகிய தேதிகளில் (இன்று மற்றும் நாளை) இரவு 9.50, 11.50 ஆகிய நேரங்களில் ஆவடி புறப்பட்டு செல்லும் மின்சார ரெயில்களும் ரத்து செய்யப்படுகிறது.

அதேபோல் சென்னை சென்ட்ரலில் இருந்து 9, 10 ஆகிய தேதிகளில் இரவு 8.30, 9.15, 10.40 ஆகிய நேரங்களில் புறப்பட்டு பட்டாபிராம் செல்லும் மின்சார ரெயில் ஆவடி- பட்டாபிராம் இடையே பகுதி நேர ரத்து செய்யப்படுகிறது. மேலும், சென்னை சென்டிரல் இருந்து 10-ந்தேதி காலை 4.15, 5.15 ஆகிய நேரங்களில் புறப்பட்டு பட்டாபிராம் செல்லும் மின்சார ரெயில் ஆவடி-பட்டாபிராம் இடையே பகுதி நேர ரத்து செய்யப்படுகிறது.

பட்டாபிராமில் இருந்து 9,10 ஆகிய தேதிகளில் இரவு 10.45 மணிக்கு புறப்பட்டு மூர்மார்க்கெட் செல்லும் மின்சார ரெயிலும், 10-ந்தேதி காலை 5.30, 6.35 ஆகிய நேரங்களில் புறப்பட்டு மூர்மார்க்கெட் செல்லும் மின்சார ரெயிலும், 10, 11 ஆகிய தேதிகளில் காலை 3.30 மணிக்கு புறப்பட்டு மூர்மார்க்கெட் செல்லும் மின்சார ரெயிலும் பட்டாபிராம் - ஆவடி இடையே பகுதி நேர ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து