தமிழக செய்திகள்

கிருமிநாசினி தெளிக்கும் பணியில் முறைகேடு - ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு

வழக்கை விசாரித்த நீதிமன்றம், வழக்கு தொடர்பான கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்ய மனுதாரருக்கு உத்தரவிட்டுள்ளது.

தினத்தந்தி

சென்னை,

மக்கள் பசுமை இயக்க நிறுவனத் தலைவர் நாஞ்சில் சி.மனோகரன், சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில் அவர், கொரோனா காலக்கட்டத்தில் தாம்பரம் மாநகராட்சியில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது குறித்து, தகவல் அறியும் உரிமை சட்டத்தில் பெறப்பட்ட தகவல்கள் முன்னுக்கு பின் முரணாக இருப்பதாக கூறியுள்ளார்.

கிருமிநாசினி தெளிப்பதற்கு ஒப்பந்தம் வழங்காமல் அரசு நிதி சுரண்டப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ள அவர், சுதந்திரமான விசாரணை குழுவை நியமித்து இதுபற்றி விசாரிக்க உத்தரவிடவும் கோரியிருந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், வழக்கு தொடர்பான கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்ய மனுதாரருக்கு உத்தரவிட்டுள்ளது. 

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்