தமிழக செய்திகள்

மதுபான கடை சூப்பர்வைசரை தாக்கியவர் கைது

மதுபான கடை சூப்பர்வைசரை தாக்கியவர் கைது செய்யப்பட்டார்

தினத்தந்தி

ராணிப்பேட்டை

மதுபான கடை சூப்பர்வைசரை தாக்கியவர் கைது செய்யப்பட்டார்

ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட்டில் தனியார் கெமிக்கல் தொழிற்சாலை அருகே அரசு மதுபான கடை உள்ளது. இந்த கடையில் வேலூர் சத்துவாச்சாரி பகுதியை சேர்ந்த பட்டாபிராமன் (வயது 51) என்பவர் சூப்பர்வைசராக வேலை பார்த்து வருகிறார்.

இந்த நிலையில் சிப்காட் வ.உ.சி. நகர் பகுதியை சேர்ந்த டெல்லி என்கிற முருகானந்தம் (52) என்பவர் முன்விரோதம் காரணமாக, பட்டாபிராமனை கடையில் இருந்து கீழே தள்ளி தாக்கியதாக தெரிகிறது. இதில் காயமடைந்த பட்டாபிராமன் சிகிச்சைக்காக வாலாஜா அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து, முருகானந்தத்தை கைது செய்தனர்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு