தமிழக செய்திகள்

மோட்டார் சைக்கிள் விபத்தில் காயம் அடைந்தவர் சாவு

கடையம் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் காயம் அடைந்தவர் பரிதாபமாக இறந்தார்.

தினத்தந்தி

கடையம்:

கடையம் அருகே உள்ள வீராசமுத்திரத்தைச் சேர்ந்தவர் பீர்முகம்மது (வயது 64). இவர் மோட்டார் சைக்கிளில் சென்று பாய் வியாபாரம் செய்து வந்தார். சம்பவத்தன்று கடையம் அருகே கோதண்டராமபுரம் விலக்கு அருகில் மோட்டார் சைக்கிளில் சென்றபோது, முன்னால் சென்ற மூதாட்டி மீது மோதாமல் இருக்க மேட்டார் சைக்கிளை திருப்பினார்.

அப்போது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்ததில் பீர்முகம்மது பலத்த காயம் அடைந்தார். உடனே அவரை சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கடையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேல்முருகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து