தமிழக செய்திகள்

மனநலன் காக்கும் 'மனம்' திட்டம் தொடக்கம்

மனநலன் காக்கும் ‘மனம்' திட்டம் தொடக்கப்பட்டது.

தினத்தந்தி

 தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மனநல மருத்துவ நிலையத்தில் தமிழ்நாட்டிலுள்ள அனைத்து அரசு மருத்துவக்கல்லூரிகளிலும் "மனநல நல் ஆதரவு மன்றங்கள்" அமைத்து மாணவர்களுக்கு மனநலன் காக்கும் "மனம்" என்ற திட்டத்தினை காணொலிக்காட்சி மூலம் தாடங்கி வைத்தார். அதன்படி கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நடந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் கலந்து கொண்டனர்.

பின்னர் சமூக மருத்துவத்துறையில் நெருப்பில்லா ஆரோக்கிய சமையல் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்களை வழங்கினார். தொடர்ந்து, ஹீமோபீலியா சிறப்பு மையம், வளரிளம் பருவ சிறப்பு சிகிச்சை மையம், தொழிற்சார் நோய் சிகிச்சை மையம், காசநோய் கண்டறிய உதவும் ட்ரூநாட் நவீன கருவி வசதியினை தாடங்கி வைத்து செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்கள். மேலும், சுகாதார பணியாளர்களுக்கு வேலை பார்க்கும் பொழுது அவர்களை பாதுகாக்கும் பொருட்டு பாதுகாப்பு கவசம் உபகரணங்கள் அடங்கிய தொகுப்புகளை வழங்கினார். இதில், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் சீனிவாசன், இணை இயக்குனர் (சுகாதார பணிகள்) சுதர்சனயேசுதாஸ், டாக்டர்கள், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து