தமிழக செய்திகள்

மஞ்சப்பை விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டி

திண்டுக்கல்லில் மஞ்சப்பை விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டி நடந்தது.

தினத்தந்தி

தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் மாவட்ட தடகள சங்கம் ஆகியவை இணைந்து மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டியை நேற்று நடத்தியது. இதற்கான தொடக்க நிகழ்ச்சிக்கு திண்டுக்கல் ஆர்.டி.ஓ. பிரேம்குமார் தலைமை தாங்கி, கொடியசைத்து மினி மாரத்தான் போட்டியை தொடங்கி வைத்தார். ஆண்கள், பெண்கள் என இரு பிரிவுகளாக இந்த போட்டி நடத்தப்பட்டது. ஆண்கள் பிரிவில் 400-க்கும் மேற்பட்டவர்களும், பெண்கள் பிரிவில் 250-க்கும் மேற்பட்டவர்களும் மஞ்சள் நிற டீ-சர்ட் அணிந்து ஓடினர்.

இந்த மினி மாரத்தான் போட்டி கலெக்டர் அலுவலக முகாம் அலுவலகத்தில் தொடங்கி, பஸ் நிலையம், மணிக்கூண்டு, வெள்ளை விநாயகர் கோவில், பழனி சாலை, தாடிக்கொம்பு சாலை, எம்.வி.எம்.கல்லூரி வழியாக சென்று மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நிறைவு அடைந்தது. இதில் வெற்றி பெற்றவர்களில் ஆண்கள் பிரிவில் 7 பேருக்கும், பெண்கள் பிரிவில் 7 பேருக்கும் முதல் பரிசாக ரூ.5 ஆயிரம், 2-ம் பரிசாக ரூ.2 ஆயிரம், 3-ம் பரிசாக ரூ.1,000-மும் வழங்கப்பட்டது. மேலும் போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்களை ஆர்.டி.ஓ. வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் மாவட்ட பொறியாளர் மணிமாறன், உதவி செயற்பொறியாளர் உதயா, மாவட்ட விளையாட்டு அலுவலர் ரோஸ் பாத்திமாமேரி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்