தமிழக செய்திகள்

செங்கல்பட்டு மாவட்டத்தில் மனுநீதிநாள் முகாம்

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் தாலுகாவுக்கு உட்பட்ட நெட்ரம்பாக்கம் கிராமத்தில் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் தலைமையில் மனுநீதிநாள் முகாம் நடைபெற்றது.

தினத்தந்தி

மதுராந்தகம் ஆர்.டி.ஓ. தியாகராஜன் வரவேற்று பேசினார். இதில் பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் சிறப்பு விளக்க உரையாற்றினார்கள். இதில் கால்நடைத்துறை உதவி இயக்குனர் அழகுவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு அந்தந்த துறை சம்பந்தப்பட்ட கண்காட்சிகளை அங்கு அமைத்திருந்தனர். முகாமில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த 80 பயனாளிகளுக்கு ரூ.56 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இதில் அரசு அதிகாரிகள், பொதுமக்கள் நெட்ரம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் துணைத்தலைவர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மதுராந்தகம் தாசில்தார் ராஜேஷ் நன்றி கூறினார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து