தமிழக செய்திகள்

மாரியம்மன் கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு

மாரியம்மன் கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டுபோனது.

தினத்தந்தி

உண்டியல் பணம் திருட்டு

பெரம்பலூர்-ஆத்தூர் சாலையில் கோனேரிபாளையம் பாரதி நகரில் மாரியம்மன் கோவில் உள்ளது. நேற்று காலை இந்த கோவிலுக்கு பக்தர்கள் வந்து பார்த்த போது உண்டியலின் பூட்டு உடைக்கப்பட்டு, அதில் இருந்த பணம் திருட்டு போயிருந்தது. அவர்கள் இந்த சம்பவம் குறித்து பெரம்பலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் அருகே பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்வையிட்டனர். அதில் நேற்று அதிகாலை 2.15 மணியளவில் ஒரே மொபட்டில் வந்த 3 மர்மநபர்கள், கோவிலை சுற்றி வந்தனர்.

வலைவீச்சு

பின்னர் அதில் 2 பேர் இறங்கி கோவிலுக்குள் சென்று அங்கிருந்த உண்டியலின் பூட்டை உடைத்து பணத்தை திருடிக்கொண்டு வெளியே வந்தனர். பின்னர் அவர்கள் 2 பேரும், தயார் நிலையில் நின்று கொண்டிருந்தவரின் மொபட்டில் ஏறி மின்னல் வேகத்தில் பெரம்பலூர் நோக்கி தப்பி சென்றது பதிவாகியிருந்தது. அந்த காட்சிகளை வைத்து மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்