தமிழக செய்திகள்

கொத்தனார் தற்கொலை

திருச்சுழி அருகே கொத்தனார் தற்கொலை செய்து கொண்டார்.

காரியாபட்டி, 

திருச்சுழி அருகே உள்ள கல்லூரணியை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 32). கொத்தனார். இவர் வேலைக்கு சென்று வீட்டிற்கு வந்தபோது தனக்கு வயிற்று வலி அதிகமாக இருந்து வந்ததால் விஷத்தை குடித்து விட்டதாக கூறினார். இதையடுத்து உடனே அவருக்கு அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சதீஷ்குமார் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து எம்.ரெட்டியபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...