தமிழக செய்திகள்

கோமாரி நோய் தடுப்பூசி முகாம்

அருள்மொழி கிராமத்தில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

கோடைகாலங்களில் கால்நடைகளை கோமாரி நோய் தாக்குவது வழக்கம். இதையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்டம் முழுவதும் கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக தா.பழூர் ஒன்றியம் காரைக்குறிச்சி ஊராட்சியை சேர்ந்த அருள்மொழி கிராமத்தில் கோமாரி நோய் தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி தலைமை தாங்கி முகாமினை தொடங்கி வைத்தார். முகாமில் கால்நடை மருத்துவ குழுவினர் 275 பசுக்களுக்கும், 25 எருமைகளுக்கும் கோமாரி நோய் தடுப்பூசியை செலுத்தினர். முகாமில் ஊராட்சி மன்ற தலைவர் கவிதா விஜயகுமார், மண்டல இணை இயக்குனர் சுரேஷ் கிறிஸ்டோபர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு