தமிழக செய்திகள்

மோட்டார் சைக்கிள்கள் மோதி மெக்கானிக் பலி

பட்டிவீரன்பட்டி அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் மெக்கானிக் பலியானார்.

பட்டிவீரன்பட்டியை சேர்ந்தவர் செல்வகுமார் (வயது 18). இவர் அதே பகுதியில் மாட்டார் சைக்கிள் பழுது நீக்கும் ஒர்க் ஷாப் வைத்து நடத்தி வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு இவர், சித்தரேவு கிராமத்துக்கு சென்ற தனது தாய் ஜெயராணியை அழைத்து வருவதற்காக பட்டிவீரன்பட்டியில் இருந்து மோட்டார் சைக்கிளில் சித்தரேவு நோக்கி சென்றார். அப்போது அய்யம்பாளையம்-பட்டிவீரன்பட்டி மெயின்ராட்டில் துணை மின்நிலையம் அருகே எதிரே அய்யங்கோட்டையை சேர்ந்த முருகன் (38) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளும், செல்வகுமாரின் மோட்டார் சைக்கிளும் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த செல்வகுமாரையும், முருகனையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக வத்தலக்குண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் செல்வகுமார் பரிதாபமாக உயிரிழந்தார். முருகன் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் தொடர்பாக பட்டிவீரன்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு