தமிழக செய்திகள்

மேகதாது அணை: கர்நாடக முதல் மந்திரிக்கு ஓ.பன்னீர் செல்வம் கண்டனம்

மேகதாது அணை விவகாரம் தொடர்பாக கர்நாடக முதல் மந்திரி எடியூரப்பாவுக்கு ஓ.பன்னீர் செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னை

அணை கட்டுவதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது என்று கர்நாடக முதல்வர் அறிவித்திருப்பதற்கு அ.தி.மு.க சார்பில் ஓ.பன்னீர் செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

சுப்ரீம் கோர்ட்டிற்கு இணையான காவேரி நடுவர் மன்றத்தின் இறுதி ஆணையை முற்றிலும் அவமதிக்கும் வகையிலும், இதுகுறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையிலும், தமிழ்நாடு நீர்வளத் துறை அமைச்சர் மத்திய நீர்வளத் துறை அமைச்சரைச் சந்தித்தப் பிறகும், அணை கட்டப்படும் என்று கர்நாடக முதல்வர் அறிவித்திருப்பது அதிர்ச்சியை அளிக்கிறது.

அணை கட்ட 2014-இல் கர்நாடக அரசு திட்ட அறிக்கையை தயார் செய்வதற்காக 25 கோடி ரூபாயை ஒதுக்கியபோதே அதனைத் தடுத்த நிறுத்த வேண்டுமென்றும், அணை கட்டுவதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்றும் கர்நாடக அரசுக்கு உரிய அறிவுரையை மத்திய அரசு வழங்க வேண்டும் என்றும் எந்த நீர் திட்டத்திற்கும் மத்திய அரசு அனுமதி வழங்கக் கூடாது என்றும் வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் 2 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதுதொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் கூடுதல் மனு ஒன்றும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அணை கட்டுவதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது என்று கர்நாடக முதல்வர் தன்னிச்சையாக அறிவித்திருப்பதற்கு அ.தி.மு.க சார்பில் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறேன்.

எனவே, தமிழ்நாடு முதல்-அமைச்சர் இதில் தனிக் கவனம் செலுத்தி அணை கட்ட கர்நாடக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காத வகையில் சட்டப்பூர்வமான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என கூறி உள்ளார்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...