தமிழக செய்திகள்

நள்ளிரவில் பயங்கரம்: தாய், மகள் அடித்துக் கொலை நகைகளை கொள்ளையடித்துச் சென்றவர்களுக்கு வலைவீச்சு

தாய், மகளை அடித்துக் கொலை செய்து நகைகளை கொள்ளையடித்த ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

தினத்தந்தி

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்டம் கலித்திரம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் தட்சணாமூர்த்தி. இவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவருடைய மனைவி சரோஜா (வயது80). இவர்களது மகள் பூங்காவனம் (60).

கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் அம்மணங்குப்பத்தில் பூங்காவனம் திருமணம் செய்து கொடுக்கப்பட்டார். இவரது கணவர் தங்கவேலு பிரிந்து சென்று விட்ட நிலையில் மகள் வள்ளியுடன் (29) பூங்காவனம் தனது தாய் வீட்டுக்கு வந்து விட்டார். அங்கு கூலி வேலை செய்துபிழைப்பு நடத்தி வந்தனர். இந்தநிலையில் நேற்று இரவு வள்ளி தனது உறவினர் வீட்டுக்கு சென்று விட்டார். இதனால் சரோஜாவும், பூங்காவனமும் நேற்று முன்தினம் இரவு சாப்பிட்டு விட்டு தூங்கச் சென்றனர்.

கொலை- கொள்ளை

நேற்று காலை நீண்ட நேரமாகியும் இவர்கள் வெளியே வராததால் அக்கம்பக்கத்தினர் சந்தேகமடைந்து உள்ளே சென்று பார்த்தபோது தாய், மகள் ரத்த வெள்ளத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்தனர்.

இதைப்பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த அவர்கள் இதுகுறித்து போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் கண்டமங்கலம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்கள். அப்போது, நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்த மர்மஆசாமிகள் சரோஜா, பூங்காவனம் ஆகிய இருவரையும் கட்டையால் அடித்துக் கொலை செய்துவிட்டு, அவர்கள் அணிந்து இருந்த ஒரு பவுன் தங்கச்சங்கிலி, அரை பவுன் கம்மல் ஆகிய நகைகளை கொள்ளையடித்துச் சென்றிருந்தது தெரியவந்தது.

போலீசார் வலைவீச்சு

இதையடுத்து தாய், மகள் உடல்களை கைப்பற்றி போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தனிப்படை அமைத்து போலீசார் தாய், மகளை கொன்ற மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகிறார்கள்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்