தமிழக செய்திகள்

ரேசன் அரிசி கடத்திய மினி வேன் கவிழ்ந்து விபத்து...!

ஈரோடு அருகே ரேசன் அரிசி கடத்திய மினி வேன் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து.

ஈரோடு,

ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் அடுத்த கள்ளிப்பட்டி அருகே உள்ள தண்ணீர்பந்தல் என்ற இடத்தில் இன்று காலை 25 மூட்டை ரேசன் அரிசியுடன் மினி வேன் ஒன்று கவிழ்ந்து கிடந்துள்ளது.

இது குறித்து பங்களாப்புதூர் போலீசாருக்கு அப்பகுதியினர் தகவல் கொடுத்தனர். தகவலை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்து போலீசார் விசாரணை நடத்தினர்.

அப்போது, மினி வேனுடன் கவிழ்ந்து கிடந்த ரேசன் அரிசியை அடையாளம் தெரியாத நபர் கடத்தி வரும் போது மினி வேன் விபத்து உள்ளாகி உள்ளது. இதனால் வாகனத்தை ஓட்டி வந்தவர்கள் வேனை விட்டுவிட்டு தப்பியோடி உள்ளனர் என்பது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்