தமிழக செய்திகள்

சென்னை தலைமை செயலகத்தில் 3-வது உலக புள்ளியியல் தின விழா - அமைச்சர் செல்லூர் ராஜூ தொடங்கி வைக்கிறார்

சென்னை தலைமை செயலகத்தில் இன்று நடைபெற உள்ள 3-வது உலக புள்ளியியல் தின விழாவை அமைச்சர் செல்லூர் ராஜூ தொடங்கி வைக்கிறார்.

தினத்தந்தி

சென்னை,

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

சென்னை தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் 20-ந் தேதி காலை 11 மணி அளவில் 3-வது உலக புள்ளியியல் தின விழா நடைபெற உள்ளது. விழாவை கூட்டுறவு, புள்ளியியல் மற்றும் முன்னாள் படைவீரர்கள் நலன் அமைச்சர் செல்லூர் ராஜூ தொடங்கிவைக்கிறார். தலைமை செயலாளர் கே.சண்முகம் சிறப்புரை ஆற்றுகிறார். மேலும், பல முக்கிய உயர் அதிகாரிகள் கலந்து கொண்டு சிறப்புரையாற்ற உள்ளனர்.

மேலும், மாநிலம் முழுவதும் உள்ள புள்ளியியல் துறை அலுவலகங்களில் 19-ந் தேதி (நாளை) இவ்விழாவினை இணைய வழியில் கொண்டாடுவதுடன் அலுவலக புள்ளியியல் சம்பந்தமாக வினா-விடை போட்டிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து வருகிற 21-ந் தேதி பல்வேறு மத்திய, மாநில அரசு துறை மற்றும் நிறுவனங்களின் உயர் அதிகாரிகள், தேர்ந்த கல்வியாளர்கள் பல்வேறு புள்ளியியல் சார்ந்த தலைப்புகளில் உரையாற்ற உள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்