தமிழக செய்திகள்

திருச்செந்தூரில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டப பணிகள் விரைவில் தொடங்கும் அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி

திருச்செந்தூரில், பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபம் கட்டும் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.

தினத்தந்தி

திருச்செந்தூர்,

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், அமைச்சர் கடம்பூர் ராஜூ நேற்று மதியம் சாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர், கோவிலில் இடிக்கப்பட்ட கிரிப்பிரகார மண்டபம் மற்றும் கோவில் வளாகத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

வேறு இடத்தில் கடைகள்

திருச்செந்தூர் கோவிலில் கிரிப்பிரகார மண்டபம் இடிந்து விழுந்ததை தொடர்ந்து கோவில் வளாகத்தில் கட்டிடங்களின் தன்மைகளை ஆராய்ந்து அகற்றப்பட்டு வருகிறது. கட்டிடங் களை அகற்றும்போது வியாபாரிகள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக கடைகள் அகற்றப்பட்டன.

இந்த கடைகளுக்கு பதிலாக பக்தர்கள், போக்குவரத்துக்கு இடையூறு இல்லாத வகையில் வேறு இடத்தில் கடைகள் ஒதுக்கி தரப்படும்.

கோவிலில் கிரிப்பிரகார மண்டபத்தை முழுவதும் அகற்றியவுடன், கல் மண்டபமாக கட்டுவதற்கு உபயதாரர் கள் தயாராக இருக்கின்றனர்.

விரைவில் பணிகள் தொடங்கும்

மறைந்த பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாருக்கு திருச்செந்தூரில் மணிமண்டபம் கட்டப்படும் என்று தூத்துக்குடியில் நடந்த எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

திருச்செந்தூரில் மணிமண்டபம் கட்டப்படும் இடத்தை தேர்வு செய்ய வருவாய் துறை அதிகாரிகள் மூலம் விரைவில் ஆய்வு செய்ய உள்ளோம். மணிமண்டபம் கட்டுவதற்கு விரைவில் அரசாணை வெளியிடப்பட்டு பணிகள் தொடங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்