தமிழக செய்திகள்

எனக்கு எதிரான மீடூ பாலியல் புகார்கள் ஜோடிக்கப்பட்டது; சட்டப்படி நடவடிக்கை - மத்திய அமைச்சர் எம்.ஜே. அக்பர் எச்சரிக்கை

எனக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் பொய்யானது மற்றும் ஜோடிக்கப்பட்டது என மத்திய அமைச்சர் எம்.ஜே. அக்பர் கூறியுள்ளார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சராக இருக்கும் எம்.ஜே. அக்பர் 40 ஆண்டுகளுக்கும் மேலாக பத்திரிகை துறையில் பணியாற்றியவர். பெண்கள் தங்களுக்கு நேரிட்ட பாலியல் துன்புறுத்தல்களை மீடூ பிரசாரம் மூலம் சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்கள். இதில் மத்திய அமைச்சர் எம்.ஜே. அக்பரின் பெயரும் இடம்பெற்றுள்ளது. அவருக்கு எதிராக பெண்கள் அடுக்கடுக்காக புகார்களை தெரிவித்து வருகிறார்கள்.

பத்திரிக்கையில் அவருடன் பணியாற்றிய போது எவ்வாறெல்லாம் மோசமாக நடந்துக்கொண்டார் என்பதை பெண் பத்திரிக்கையாளர்கள் விரிவாக தெரிவித்து வருகிறார்கள். இதற்கிடையே அவர் விளக்கம் அளிக்க வேண்டும் அல்லது பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியது. இவ்விவகாரம் தொடர்பாக மத்திய அமைச்சர்கள் யாரும் வெளிப்படையாக பதில் தெரிவிக்கவில்லை. அவர்தான் பதிலளிக்க வேண்டும் என்றனர்.

இந்நிலையில் ஆப்பிரிக்க நாடுகள் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு டெல்லி திரும்பிய எம்.ஜே. அக்பர், தன்மீதான பாலியல் புகார்கள் குறித்ததற்கு உரிய விளக்கத்தை வெளியிடுவேன் என குறிப்பிட்டுள்ளார். இப்போது அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாலியல் புகார்கள் அனைத்தையும் நிராகரித்துள்ளார், மேலும் சட்டப்பூர்வமான நடவடிக்கையை எடுக்கப்போவதாக மிரட்டியுள்ளார். வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், எனக்கு எதிராக தெரிவிக்கப்பட்டுள்ள புகார்கள் அனைத்தும் பொய்யானவை மற்றும் ஜோடிக்கப்பட்டது. இந்த பொய்யான, அடிப்படையற்ற மற்றும் காட்டுத்தனமான குற்றச்சாட்டுக்கள் என்னுடைய நற்பெயருக்கு பெரும் களங்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இவ்விவகாரத்தை என்னுடைய வழக்கறிஞர்கள் ஆலோசனை செய்வார்கள், என்று கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையே பாராளுமன்றத் தேர்தல் நெருங்கும் வேலையில் இந்த புயல் எழும்பியுள்ளது தொடர்பாக கேள்வியை எழுப்பியுள்ளார் எம்.ஜே. அக்பர். இந்த சம்பவத்தினால் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்யப்போவது கிடையாது என தெரிவித்துள்ளார்.

எம்.ஜே. அக்பருக்கு எதிராக புகார்களை தெரிவித்து வரும் பெண்கள் அனைவரும் பத்திரிக்கையாளர்கள்தான், அவருடைய அலுவலகத்தில் எவ்வாறெல்லாம் தவறாக நடந்துக்கொண்டார் என பட்டியலிட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து