கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

கோவில்களில் நடைபெறும் முறைகேடுகள் குறித்து புகார் அளிக்கலாம் - அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

எனது தனிப்பட்ட மின்னஞ்சல் முகவரிக்கு ஆதாரங்களுடன் புகார் அளிக்கலாம் என்று அமைச்சர் ரமேஷ் அறிவித்துள்ளார்.

சென்னை,

கோவில்களில் நடைபெறும் முறைகேடுகள் குறித்து எனது தனிப்பட்ட மின்னஞ்சல் முகவரிக்கு ஆதாரங்களுடன் புகார் அளிக்கலாம் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

அன்பிற்குரிய பொது மக்கள் அனைவருக்கும் ஒரு முக்கிய அறிவிப்பு! தமிழ்நாடு முழுவதும் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் நடைபெறும் முறைகேடுகள், சட்டவிரோதமாக பணம் பெறுதல், திருக்கோவில்களின் திருப்பணிகள் மற்றும் திருக்கோவில்களின் வேலைவாய்ப்பு போன்றவற்றிற்கு லஞ்சம் பெறுதல் போன்ற குற்றங்களை பற்றி கீழே வழங்கப்பட்டுள்ள எனது தனிப்பட்ட மின்னஞ்சல் முகவரிக்கு தகுந்த விளக்கம் மற்றும் ஆதாரங்களுடன் புகார்களை அளியுங்கள்.

நானும் எனது அலுவலகமும் நேரடியாக இந்த புகார்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கான வழிவகைகளை செய்வோம் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். E-Mail : minister_hrce@tn.gov.in

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.