தமிழக செய்திகள்

நெல்லையப்பர் கோவில் வெள்ளித்தேர் பணிக்காக வெள்ளிக்கட்டிகளை வழங்கினார் அமைச்சர் சேகர்பாபு

அடுத்தாண்டு ஜூலை மாதத்திற்குள் புதிய வெள்ளித்தேர் பக்தர்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படுமென அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

தினத்தந்தி

சென்னை,

நெல்லையப்பர் கோவிலுக்கு புதிய வெள்ளித்தேர் செய்வதற்காக 100 கிலோ வெள்ளிக்கட்டிகளை வழங்கி, வெள்ளித்தகடு பதிக்கும் பணியையும் அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார். இதற்கான நிகழ்ச்சி சென்னை இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தில் நேற்று நடந்தது. அதனைத்தொடர்ந்து, அமைச்சர் சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது:-

நெல்லை, நெல்லையப்பர் கோவிலில் ஏற்கனவே பயன்பாட்டில் இருந்த வெள்ளித்தேர் 1991-ம் ஆண்டு தீ விபத்தில் எரிந்து விட்டது. சுமார் 33 ஆண்டுகளுக்குப் பின் புதிய வெள்ளித்தேர் உருவாக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. நன்கொடையாளர்கள் ராஜரத்தினம், சபாபதி ஆகியோர் 100 கிலோ வெள்ளிக்கட்டியை வழங்கியுள்ளனர்.

இதன் மதிப்பு ரூ.1 கோடியே 2 லட்சம் ஆகும். அடுத்தாண்டு ஜூலை மாதத்திற்குள் புதிய வெள்ளித்தேரை பக்தர்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை